tamilnadu

img

டிஜிட்டல் இந்தியாவில் மரண குழிகள்! - கௌதம்.தர்மா

ஹாலிவுட் திரைபடங்களுக்கு இணை யான தொழில்நுட்பத்துடனும் பொருட்செலவுடனும் இந்திய  திரைப்படங்கள் வெளியாகின்றன. நிலவில் மனி தனை அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள ஆயுத்த மாகிறது இந்தியா. இத்தகைய நவீனயுகத்தின் காலகட்டத்தில் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலமும், கழிவுநீர் தொட்டி, செப்டிங்  டேங்க்குகளில் சுத்தம் செய்ய இறங்கி உயிரி ழக்கும் அறியாமையும் தொடர்கின்றன என்பதே வேதனை. இந்த பிப்ரவரி மாதம் (11.02.2020) நாடாளு மன்ற கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட கேள்வி யின் போது, மத்திய சமூகநீதிதுறை அமைச்சர்  ராம்தாஸ் அத்வாலே அளித்த பதிலில், கழிவுநீர்  தொட்டி மற்றும் செப்டிங் டேங்க என சுத்தி கரிப்பு செய்ய இறங்கி உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 2015ல் 57 பேரும், 2016ல் 49 பேரும்,  2017ல் 93 பேரும், 2018ல் 68 பேரும், 2019ல் 110 பேரும் இறந்துள்ளதாக தெரிவுத்துள்ளார். அதாவது 2018ல் ஏற்பட்ட மரணத்தைவிட 62 விழுக்காடு மரண விகிதமானது 2019 ஆம் ஆண்டில் மட்டும் உயர்ந்துள்ளது.
தமிழகத்துக்கும் உ.பி.க்குமே போட்டி
அந்த பதிலில் கொடுக்கப்பட்டுள்ள தக வலின்படி 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை  இறந்தவர்களின் எண்ணிக்கை உத்திரப்பிர தேசத்தில் 63 பேரும், தமிழகத்தில் 49 பேரும், குஜராத்தில் 39 பேரும், கர்நாடகாவில் 35 பேரும், டில்லியில் 34 பேரும் என முதல் 5 இடங்களில் இந்தியாவின் வளர்ச்சி முகமாக சித்தரிக்கும் குஜராத், தமிழ்நாடு, டில்லி இடம்பெற்றிருப்பதே வியப்பு. கடந்த 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது சமூக நீதி துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்த  தகவலின்படி, கழிவு நீர் தொட்டியில் 2013 முதல்  2018 வரையிலாக சுமார் 71 பேர் உத்திர பிரதேச மாநிலத்திலும், 144 பேர் பேர் தமிழ கத்திலும் மரணமடைந்துள்ளதாக தெரிவித்தார்.  தமிழகத்தில் மரணமடைந்த 141 பேருக்கு தலா  பத்து இலட்சம் இழப்பீடாக தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தரவரிசையில் தவறாமல் இடம்பெறும் தமிழ்நாடு.
மாறாத சாதியப்பிடி
கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்க ரின் 125வது பிறந்தநாளை கொண்டாடிய நமக்கு,  அவர் சுட்டிக்காட்டியது இன்றும் பொருத்த மாய் அமைகிறதே, “இந்தியாவை பொறுத்த வரை ஒருவன் செய்யும் தொழிலால் துப்புரவு  தொழிலாளியாக அடையாளப்படுத்துவ தில்லை. ஆனால் அதற்கு மாறாக அவன் பிறப்பால் வகைப்படுத்தப்படுகிறான்”. இன்றும் தொடரும் இந்த மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலநிலையில் சிக்கி யிருப்பது தலித்துகளே! இந்த பிரச்சனை வெறும் சாதியம் சார்ந்தது  அல்ல!.. இங்கு தான் அரசின் தவறான புரிதல்  உள்ளதாகவே கருதுகிறேன்.
முரண்பாடான தரவுகள்
அதே நாடாளுமன்ற கேள்வியில், தொடர்ச்சி யாக நகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து என  13 மாநிலங்களில் கடந்த 2013 -14 முதல் ஜனவரி  2020 வரை 14,559 மலம் அள்ளும் தொழிலாளர்க ளும், சுவச்பாரத் மிஸன் கணக்கெடுப்பின்படி 18 மாநிலங்களில் 194 மாவட்டத்தில் 48,345 மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டு மாற்று தொழில் ஏற்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவிக்கிறார். இதன் மூலம் சட்டம் இயற்றப்பட்டு 7 ஆண்டு கள் கடந்தும் சட்டத்தின்படி கணக்கெடுப்பு மற்றும் அடையாளம் காணல் (survey and identification) இன்னும் சில மாநிலங்களில் நடத்தபடாதது ஏன் என்ற கேள்வியெழுகிறது. ஆனால் தேசிய கர்மசாரி அமைப்பின் ஆண்டறிக்கையில் (National Safai Karamchari Finance and Development Corporation’s 20th Annual Report 2016-2017) 26 இலட்சம் மனிதனே சுத்தம் செய்யும் கழிப்பறைகளும் (insanitary latrines), 12,742  மலம் அள்ளும் துப்புரவாளர்களும் 13 மாநிலங்க ளில் மட்டும் கணக்கெடுப்பின் போது கண்ட றியப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது 13000 தொழிலாளர்கள் 26 இலட்சம் கழிப்பறைகள் சுத்தம் செய்கிறார்கள் என சொல்வது ஏற்றுதக்க தரவுகள் அல்ல. 2011 தேசிய மக்கள் தொகை கணக்கெடிப் பின்படி தமிழகத்தில் 363 மலம் அள்ளும் துப்புர வாளர்களும், 2013ல் தேசிய கர்மசாரி அமைப்  பின் கணக்கெடுப்பில் 3032 மலம் அள்ளும் துப்புரவாளர்கள் 8 மாவட்டத்தில் மட்டும் கண்டறியப்பட்டது முரண்பாட்டின் உச்சம். மாநிலமும், சமூக நீதி துறை அமைச்சக மும் கணக்கெடுப்பு செய்ய ஒரு பொது வழி முறையை பின்பற்ற வலியுறுத்துவதும், நாடு  முழுவதும் முழுமையான அளவில் கணக்கெ டுப்பு நடத்தி தரவுகள் கண்டறிய வேண்டும்.
சட்டம் என்ன சொல்கிறது
மத்திய அரசு 2013ல் (Prohibition of Manual  scavengers and rehabilitation act) மனித கழிவுகளை மனிதனே அள்ளும் தடை சட்டம்  கொண்டு வந்தது. இதன்படி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு  தாக்கி உநிரழந்தவர் குடும்பத்திற்கு உடனடி யாக பத்து இலட்சம் நிதியை சம்பத்தப்பட்ட செப்டிக் டேங்க் உரிமையாளர் அல்லது செப்டிக்  டேங்க் வண்டி ஒப்பந்ததாரர் அளிக்க வேண்டும். அத்துடன் உயிரழப்புக்கு காரணமான வர்கள் மீது ஐ.பி.சி 304(1)ல் அதாவது அஜாக்கிர தையாக இருந்து உயிரிழப்பு ஏற்பட காரணமாக  இருத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிய வேண்டும்.  ஆனால், எந்த தேசிய குற்றப்பிரிவின் ஆய்வ றிக்கைகளிலும் இந்த வழக்கு விவரம் குறிப்பிடப்படுவதில்லை. சமூக நீதி துறையின் கீழே (National commission for safai karmacharis) தேசிய  கர்மசாரி என்ற அமைப்பின் மூலம் மலம் அள்ளும் துப்புரவு தொழிளார்களை கண்டு பிடித்து அவர்களுக்கு வேறு சுய வேலை வாய்ப்பு திட்டம், மானியத்துடன் கடன் மற்றும்  அவர்களது குழந்தைகளுக்கு கல்வி  உதவித்தொகை என்றெல்லாம் செயல்படுத்தி னாலும் இந்த அவலம் தொடர்கிறது.
அறியாமையால் ஏற்படும் மரணங்கள்
அதாவது பொது கழிப்பறைகள், திறந்த வெளி சாலையோர மனித கழிவுகள், விலங்கின கழிவுகள், வேறு சில வகையான கழிவுகளை அகற்றுவது என்பது வேறு. இது பாதாள சாக்கடைகள், சாக்கடை அடைப்பு, குடிநீரில் சாக்கடை கலப்பு, கழிவுநீர் தொட்டி, செப்டிக் டேங்க் போன்றவற்றை சுத்தம் செய்யும் போதே அகால மரணங்கள் ஆக்ஸிஜன் குறைபாட்டினாலும், விஷவாயுக்கள் தாக்கு வதாலும் ஏற்படுகின்றன. ஆனால் நாம் இதனை  எந்த வகையிலாவது சுத்தமோ பராமரிப்பு பணியோ செய்துதான் ஆக வேண்டும்.        தனியார் நிறுவனம் அல்லது வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய சராசரி யாக 5000 ரூபாய் வசூலிப்பதால், மக்கள் 1000  ரூபாய்க்கு மனிதனை விட்டு சுத்தம் செய்கிறார் கள். இது ஒரு தண்டனைக்குரிய குற்றம் என  கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்ப டுத்திட வேண்டும்.
நவீன தொழில்நுட்பமே தீர்வு
ஜூன் 2018ஆம் ஆண்டு, தானியங்கி ரோபோ  மூலம் சாக்கடை சுத்தம் செய்வதற்கு, இந்தியன்  ஆயில் நிறுவன நிதி உதவியுடன் ஒரு எந்திரம் கும்பகோணம் நகராட்சியில் வாங்கப்பட்டது. இது சராசரியாக மாதம் 250 சாக்கடைகளை சுத்தம் செய்வதாக கூறுகிறார்கள். இது போன்ற முன்னெடுப்புகளை மாநகராட்சிகள் செய்தல் வேண்டும். இது மட்டும் போதாது, சென்னை ஐஐடி பேராசிரியர் டாக்டர் பிரபு ராஜகோபால் குழு, செபாய் செப்டிக் டேங்க ரோபோட் (Sepoy Septic Tank Robot) என்ற ரோபோவை கண்டு பிடித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 10 முதல்  30 லட்சம் வரை இருக்கும். இது போன்று கண்டுபிடிப்புகளை மானி யத்துடன் ஸ்டார்ட்அப் ஆக (start up) மாற்றி,  அதனை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவும் கர்மசாரி அமைப்பும் இணைந்து அனைத்து ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு கொண்டு சேர்க்க  வேண்டும். ஏனெனில் உள்ளாட்சி அமைப்பு களான நிதியை வைத்து இதனை முழு நவீன படுத்துதல் சாத்தியமற்றது. இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த  கட்டம், 5ஜி தகவல் தொழில் நுட்பம் என்று சிந்திக்கும் வேளையில் இதைபற்றியும் சிந்திப்  பது கட்டாயம். சாதிய கறையை அழிக்கவும் அகால மரணங்களை தடுக்கவும் அறிவியல் துணை கொண்டு மாற்றம் படைப்போம்.